Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற  கிடாத்தான் - 2023 

பிப்ரவரி 07, 2023 08:15

ராசிபுரம் : - ராசிபுரம் எஸ்.ஆர்.வி.இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் மாணவ மாணவியர்களுக்கான கிடாத்தான் 2023 என்ற மாரத்தான் ஓட்டப் போட்டி  நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவியர்களிடையே விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உடல் ஆரோக்கியம்  ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓட்டப்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனா்.  


இதனையடுத்து 500 மீ, 1 கி.மீ, 2 கி.மீ, 3 கி.மீ., 5 கி.மீ.,என வயது அடிப்படையில் ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் 3 வயது முதல் 15 வயதுடையை பள்ளி குழந்தைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக பள்ளியின் முன்பாக துவங்கிய ஒட்டத்தை பள்ளியின் தலைவர் என்.எஸ்.கணேஷ்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஓட்டத்தில் முதலிடம் பிடித்து மாணவ மாணவியர்களுக்கு பள்ளித் தலைவர் என்.எஸ்.கணேஷ்பாபு, துணைத் தலைவர் சுபலட்சுமிபுலுசு ஆகியோர் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்